இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
Update: 2023-11-14 04:22 GMT
பிரகாஷ், வேல் தேவராஜ்
பவானிசாகர் அடுத்த சீரங்கராயன்மேடு வனப்பகுதியில் அதிவேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வேல் தேவராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.