வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது!
பல்லடத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-11 09:19 GMT
கைது
பல்லடத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது. பல்லடம் அருகே கரைப்புதூரைச் சேர்ந்தவர் முரளி (வயது28). இவர் அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் மதுபானகூடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் முரளியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து பல்லடம் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் முரளியிடம் செல்போனை படித்தவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா(28), மற்றும் முசிறி யை சேர்ந்த அருள் பிரசாத் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.