குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது!

இரத்தினகிரி பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-10 06:56 GMT

அய்யப்பன், கண்ணதாசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவை சேர்ந்தவர்கள் வீரமுத்து மகன் கண்ணதாசன் (27) மற்றும் சக்திவேல் மகன் அய்யப்பன் (21).இவர்கள் இருவர் மீதும் ரத்தினகிரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது. தலைமறைவாக இருந்த இவர்களை ஆற்காடு நகர இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்களால் ஏற்படும் குற்ற சம்பவத்தை தடுக்கும் பொருட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கண்ணதாசன் மற்றும் அய்யப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது கலெக்டர் ச.வளர்மதி செய்ய உத்தரவிட்டார்.இதனையடுத்து அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags:    

Similar News