கனமழையால் 2000 வாழைகளை சூழ்ந்த வெள்ளம்

திருவட்டார் அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2000 வாழைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

Update: 2024-05-24 14:19 GMT

திருவட்டார் அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2000 வாழைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.


திருவட்டாரை அடுத்த குமரன்குடியை சேர்ந்தவர் ராகவன்.விவசாயி. இவர் குமரன்குடி நெடுமானூர் குளத்தையொட்டி தனியாரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த 1% ஏக்கர் வயலில் வாழை விவசாயம் செய்துள்ளார். இவரது வயலின் ஒருபுறம் நெடுமானூர் குளமும், மறுபுறம் வாய்க்கால் ஓடுகிறது. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் கனமழையாலும், குளத்தில் வடிகால் சரிவர இல்லாததாலும், வாய்க்காலில் இருந்து சரிவர தண்ணீர் பாய்ந்து போகாததாலும் தண்ணீர் வயலில் புகுந்தது. இதனால் சுமார் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த துறை சார்ந்த அலுவலர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மழையினால் வாழைகள் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News