2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டுக்கு போனது, 2026-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக வீட்டுக்கு போவது உறுதியென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டுக்கு போனது, 2026-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக வீட்டுக்கு போவது உறுதியென விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்*;
2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டுக்கு போனது, 2026-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக வீட்டுக்கு போவது உறுதியென விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் சங்கிலியாண்டி கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டார். தொடக்கத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் ஆர் பி உதயகுமார் தலைமையில் கலந்து கொண்ட அனைவரும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் 2000-க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை ஆர்பி உதயகுமார் வழங்கினார். அப்போது பொதுமக்கள் வேட்டி சேலைகளை வாங்க முண்டியடித்ததால் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பல்வேறு முயற்சிகள் செய்தும் பொது மக்களை கட்டுப்படுத்த முடியாததால் நிகழ்ச்சி நடந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் வரை பரபரப்பு காணப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ அன்ன தானத்தை உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை விவாதிக்க முடியாது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் நாட்டுக்கான முதல்வரல்ல. வீட்டுக்கான முதல்வர் என அனைத்து மக்களுக்கும் தெரியும். நாட்டுக்கான முதலமைச்சர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான். ஸ்டாலின் விளம்பர முதலமைச்சர். விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டாம். விவசாய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் வேண்டும். எங்களிடம் ஆட்சி இல்லாத நிலையிலும் அதிகாரம் இல்லாத நிலையிலும் காவல்துறையினர் பொதுமக்களை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்காத நிலையிலும் ஏராளமான மக்கள் இங்கே திரண்டு உள்ளனர். 2011ம் ஆண்டு நடந்த வரலாறு வரும் 2026 இல் திரும்புவதை நான் கண்கூடாக பார்க்கிறேன். 2011ம் ஆண்டு திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டுக்கு போனது. 2026 இல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குடும்ப பாசத்தால் வீட்டுக்கு போவது உறுதி. அதிமுக ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அமைச்சர்கள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வாங்கிக் கொடுத்தோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த இளைஞன் ஆயிரம் கோடி செலவில் சினிமா தயாரிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு தகுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர், மு க முத்து அவர்களின் மகள் வழி வந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் என்பதே. அந்த ஆகாஷ் பாஸ்கரன் என்ற இளைஞர் இரண்டு வருடங்களில் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ரத்தீஷ் என்ற இன்னொருவர் உதயநிதி ஸ்டாலின் கூண்டு பறவையாக இருந்து கூண்டை விட்டு தற்போது பறந்து விட்டார். இவர் தற்போது குபேரனுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இதை உன்னிப்பாக கவனிக்கும் மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதை மடைமாற்றம் செய்யும் வகையில் விளம்பரத்தை அச்சாணியாக வைத்து அரசு சுற்றிக் கொண்டிருக்கிறது. விளம்பர அரசு நிலைத்ததாக வரலாறு இல்லை. என தெரிவித்தார் பேட்டி: ஆர்.பி.உதயகுமார் - முன்னாள் அமைச்சர் (அதிமுக)