2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் சம்பந்தமாக 128 பேருக்கு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பு ஒத்திவைப்
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் சம்பந்தமாக 128 பேருக்கு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பு ஒத்திவைப்பு*;
திருப்பத்தூர் மாவட்டம் 2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் சம்பந்தமாக 128 பேருக்கு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பு ஒத்திவைப்பு* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்கிற இளைஞரை, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு அடுத்த குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஷமீல் அகமது சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் காவலில் இருந்தபோது காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை மற்றும் கடைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது, இதில் 71 காவலர்கள் காயம் அடைந்தனர் இது தொடர்பாக 191 பேர் கைது செய்யப்பட்டு பின்பு 132 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 128 பேரின் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக வெளியான தகவலை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகிய 2 எஸ் பி களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்... சுமார் 11 மணிக்கு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிபதி மீனா குமாரி நாளை மறுநாள் எட்டாம் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக ஒத்தி வைத்தார்.