2025ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் 2025ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்.;
பெரம்பலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் 2025ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனி நபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்த வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடர்பானதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு தொடர்புடைய செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு துறையில் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்பு / கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லூரிகள் / குடியிருப்பு நலச்சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு வழங்கவுள்ளது. இவ்விருதுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு 15.04.2025 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெரம்பலூர் அவர்களை நேரில் அணுகலாம்.