2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது

அதிமுக ஆட்சியில் உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள் என பட்ஜெட் குறித்த பாமக தலைவர் அன்புமணியின கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி

Update: 2024-07-25 13:04 GMT
:- மயிலாடுதுறையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப்பின் குழு தலைவரும் காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொது அவர் கூறுகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை காப்பியடித்து மத்திய பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். பிகாருக்கும், ஆந்திராவுக்கும் மட்டுமான நிதிநிலை அறிக்கை அல்ல. நிதிநிலை அறிக்கை என்பது நாடு முழுமைக்குமானது. பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது குறித்தெல்லாம் சொல்லாமல் தமிழக பாஜக தலைவர்கள் உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு வகையில் செலவு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பாஜகவினர் பதில் சொல்ல வேண்டும். ’பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்.பிக்களை கொடுத்திருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்.பிக்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா?. தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார். ஜெயலலிதா இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. இத்திட்டத்தால் தமிழக உரிமை பறிக்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியுள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டதால்தான் தற்பொது மின் கட்டண உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்துளோம். .

Similar News