23வது வார்டில் ஓடை மண் அகற்றம்
23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட பகவத்சிங் தெருவில் இன்று (ஜூலை 29) தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். ஓடை மண்ணை துரிதமாக அகற்றிய மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.