23வது வார்டில் ஓடை மண் அகற்றம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டு;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தொட்டி பாலத்தெரு மெயின் ரோட்டில் ஓடை மண் காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் இன்று (ஆகஸ்ட் 31) ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது. துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.