மாவட்டத்தில் 25ம் தேதி ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் 25ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தகவல் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-06-15 07:52 GMT

மாவட்ட ஆட்சியர் 

தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்துறை சார்பில், நடப் பாண்டிற்கான ஜமாபந்தி சிறப்பு முகாம் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி நடக்கிறது, என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் வாரியாக ஜமாபந்தி நடக்கும் இடங்கள் விபரம் வருமாறு,

பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடக்கிறது. பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில், டிஆர்ஓ பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையிலும், தர்மபுரி தாலுகா அலுவலகத்தில்யீடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும்,

காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ காயத்திரி தலைமையிலும், அரூர் தாலுகா அலுவலகத்தில் அரூர் ஆர்டிஓ வில்லியம் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்னை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல் முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர்திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்பு திருத்தம், நிலவுடைமை மேம்பாட்டு திட்ட மேல் முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறை மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மனுக்களையும், ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News