தனியார் உணவகத்தில் 26 கிலோ குட்கா பறிமுதல்

சிறுகனூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

Update: 2024-03-01 05:09 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல், மகாதேவன் ஆகியோர் சிறுகனூர் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது சிறுகனூர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றினர்.பின்னர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேல் நடவடிக்கைகாக விற்பனை செய்த மூன்று குற்றவாளிகளையும் புகையிலை பொருட்களையும் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் உணவகத்தில் நான்கு சட்ட பூர்வ உணவு மாதிரி எடுத்தனர்.

Tags:    

Similar News