செல்போன் பறித்த 3பேர் கைது - மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தூத்துக்குடியில் லோடுமேனை கம்பால் தாக்கி செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-01 02:21 GMT

கைது

தூத்துக்குடி புதிய முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் யோகராஜ் (27). இவர் தூத்துக்குடி காற்கறி மார்க்கெட்டில் லோடு மேனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று காலையில் 5 மணியளவில் அம்பேத்கர் நகர் எம்ஜிஆர் சிலை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3பேர் அவரை கம்பால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.800 பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அவர் அவர் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி தாளமுத்துநகர் செயின்ட் மேரிஸ் காலனி ராஜா மகன் ஷெர்வின் (21), அன்னை தெரசா நகர் அண்டன் வாஸ் மகன் பிரெட்லின் (21), கோவில்பிள்ளை விளை செல்வபதி மகன் மகராஜா (எ) சதீஷ் (21) ஆகிய 3பேரையும் கைது செய்தார். மேலும் திருடப்பட்ட செல்போன், திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News