விழுப்புரத்தில் இருந்து 300 போலீசார் திருவண்ணாமலைக்கு பயணம்

Update: 2023-11-23 07:11 GMT
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவார்கள். இதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக விழுப்புரத்தில் இருந்து நேற்று முதல்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ், சுனில், ராமச்சந்திரன் உள்ளிட்ட 300 போலீசார், திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News