மின் கம்பி அறுந்து விழுந்து 31 ஆடுகள் சாவு!

திமிரி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 31 ஆடுகள் உயிரிழந்துள்ளது

Update: 2024-06-01 00:56 GMT

திமிரி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 31 ஆடுகள் உயிரிழந்துள்ளது


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள ஆனைமல்லூர் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சங்கர் (55).இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

அதன் காரணமாக சங்கர் தனது ஆடுகளை வேப்ப மரத்தின் அடியில் கும்பலாக நிறுத்தியிருந்தார். அப்போது மரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த மின் கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 31 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News