சென்னை புயல் மீட்பு பணிக்கு 35 பணியாளர்கள் பயணம்

Update: 2023-12-05 01:11 GMT

சென்னை செல்லும் பணியாளர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 35 தூய்மைப்பணியாளர்கள் அனுப்பப்பட்டனர். மயிலாடுதுறை நகராட்சியில் 30 பணியாளர்களும் சீர்காழி நகராட்சியில் 5 பணியாளர்களும் என 35 பேர் சிறப்பு பேருந்து மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த சிறப்பு பேருந்தினை மயிலாடுதுறை நகராட்சி தலைவர், குண்டாமணி செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர் ,ஆகியோர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். இவர்கள் சென்னை மறைமலைநகர் நகராட்சிக்கு சென்று, அங்கிருந்து தூய்மை பணிக்கு பிரித்து அனுப்பப்படுவார்கள், என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். .
Tags:    

Similar News