சுரண்டை அருகே பேருந்து கண்ணாடியை உடைத்த 4 போ் கைது

தனியாா் பேருந்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து நடத்துநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2023-12-10 02:05 GMT

தாக்குதலுக்குள்ளான பேருந்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் தனியாா் பேருந்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து நடத்துநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை வழியாக ஆலங்குளம் சென்ற தனியாா் பேருந்தை வழிமறித்த 4 போ் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து விட்டு சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தாக்குதல் நடத்தியவா்கள் ஆலங்குளம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த முத்துச்செல்வம்(28), மாரியப்பன்(28), மாடசாமி(26), ராமசாமி(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Tags:    

Similar News