மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-13 12:02 GMT

ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி என 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் மாதம் 4-ந் தேதி ஆகிய 4 நாட்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News