குட்காவை குடோனில் வைத்து வியாபாரம் செய்த 4 பேர் கைது

குன்றத்தூரில் குட்காவை குடோனில் வைத்து வியாபாரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-25 15:58 GMT

கோப்பு படம் 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சென்னை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல், குட்காவை குன்றத்தூர் பகுதியில் குடோன் வைத்து கீழ்பாக்கம் உள்ளிட்ட சென்னை முழுவதும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, குன்றத்தூர் குடோனில் இருந்து 2 டன் குட்காவை கடத்தி வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா, ஆர்திஷ் வில்சன், முத்துக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்கள் பெங்களூரிலிருந்து குட்காவை கடத்தி, குன்றத்தூரில் குடோன் வைத்து சென்னை முழுவதும் குட்காவை சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இவர்களிடமிருந்து 2 டன் குட்கா, கார், இரண்டு சரக்கு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கைதான 4 பேரையும் தனிப்படை போலீசார் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News