விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற 4 பேர் பூரண குணம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர் .

Update: 2024-07-04 05:29 GMT

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்த 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதே நேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பலர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 8 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்து (வயது 55), மணிவேல் (40), சாமிதுரை (60), சந்திரசேகர் (27) ஆகிய 4 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனால் விஷ சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்டவர்களில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News