சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

சோமூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-03 07:43 GMT

பைல் படம் 

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட சோமூர் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சோமூரை  சேர்ந்த ரவி, முருகவேல்,  சின்னசாமி, பழனிச்சாமி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.250-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News