ஓடும் பஸ்ஸில் பணம் திருடிய 4 பெண்கள் கைது !

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பணம் திருடிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-12 12:10 GMT
கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர்ச்சியாக பெண்களிடம் செயின், பணம்  பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.    இந்த நிலையில்  நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தக்கலைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.  நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது லதாவை இடிப்பது போல் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென லதாவின் ஹேண்ட் பேக்கிலிருந்து பணத்தை திருடி அருகில் நின்ற மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார். சுதாரித்துக் கொண்ட லதா கூச்சலிட்டதால் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அந்த நேரத்தில் பஸ்சில்  இருந்து நான்கு பெண்கள் இறங்கி தப்பி ஓட முயன்றனர்.  அவர்களை அங்கிருந்த பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அங்கு நடைபெற்ற விசாரணையில், அந்த பெண்கள் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (50), அஞ்சல் (24), முத்துமாரி (24), ராஜாத்தி (21) என்பது தெரிய வந்தது.  நால்வரையும்  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருக்கிறார்கள்.
Tags:    

Similar News