முசிறி பகுதியில் கள் விற்ற 5போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த 5 பேரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-04-24 01:40 GMT

கள் விற்றவர் கைது

முசிறி காவிரி கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுத்தலின் பேரில் முசிறி போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது கள் விற்பனை செய்ததாக முசிறி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (35), உமையாள்புரம் கொல்லத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நல்லதம்பி (47), சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள கொத்தம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிவேல் (55), வீரகவுண்டனூரைச் சோ்ந்த ஸ்ரீ ரங்கராயா் மகன் தனசேகா் (45), திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூா் பதனிதோப்பு பகுதியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் செல்லமுத்து (60) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 24 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Tags:    

Similar News