வாக்களித்தவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி - ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை ஏப். , 20-ம் தேதி காண்பித்தால், சாப்பிடும் உணவுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என செங்கல்பட்டு கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2024-04-05 03:03 GMT

ஆட்சியர் அருண்ராஜ்

வாக்குப்பதிவை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையமும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப். , 19-ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்த, ஓட்டளித்துவிட்டு வருபவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், ''லோக்சபா தேர்தலில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஏப். , 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும்; வாக்காளர்கள் ஓட்டு போட்டுவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்..20ம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News