அரியலூர் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் திருட்டு

அரியலூர் அருகே மாந்திரீகம் இருப்பதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் திருடிச் சென்றவரை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-29 09:10 GMT
செயினை பறித்த மூதாட்டி சின்னப்பிள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வீட்டில் மாந்திரீகம் இருப்பதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயினை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். செந்துறை அருகேயுள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை(70). இவரது வீட்டுக்கு நேற்று வந்த மர்மநபர் ஒருவர், உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது.

அதனை நீக்க மாந்திரீகம் செய்ய வேண்டும். எனவே, தாங்கள் அணிந்துள்ள தாலிச் செயினை தாருங்கள் என கேட்டுள்ளார். அப்போது, கவரிங் செயினை மூதாட்டி கொடுத்த நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளாத மர்மநபர், தங்கச் செயினை வைத்து தான் மாந்திரீகம் செய்யமுடியும் என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய மூதாட்டி தான் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை கழட்டி கொடுத்த நிலையில், மர்மநபர் அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து சின்னப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News