50 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

50 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து வரவேற்றார்.;

Update: 2025-08-25 10:17 GMT
வாணியம்பாடியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 50 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த வேல் என்கிற இளவரசன் மற்றும் லோகநாதன் தலைமையில் த.வெ.க, பாமக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதியதாக கட்சியில் இணைந்த வர்களுக்கு மாவட்ட செயலாளர் தேவராஜி சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளர் வி.ஜி.அன்பு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News