கெலமங்கலத்தில் 515வது ஆண்டு கம்பேகவுடா ஜெயந்தி விழா

கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் 515- வது ஆண்டு கம்பேகவுடா ஜெயந்தி விழா நடைபெற்றது.

Update: 2024-06-30 09:34 GMT

பிறந்த நாள் கொண்டாட்டம்

கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் 515- வது ஆண்டு கம்பேகவுடா ஜெயந்தி விழா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஒக்கலிககவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் கௌரவ தலைவர் ஆறுமுகச்சாமி அவர்களின் ஆசியுடன் மாநிலத் தலைவர் ஆர். வெள்ளங்கிரி ரிட்டையர்டு டிஎஸ்பி அவர்களின் வழிகாட்டுதலின் படி,

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் 515- வது ஆண்டு கெம்பேகவுடா ஜெயந்தி விழாவினை மாவட்ட தலைவர் கோபால்,லோகேஷ்,மற்றும்நரசிம்மன்,வி.எச்.பி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இன்று கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மிகச் சிறப்பாக கெம்பே கவுடா சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து பூஜை செய்தனர்.பிறகு கேக் வெட்டி பட்டாசு உடைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் போடிச்சிப்பள்ளிசோமசேகர்,பிரவின்,விக்ரம்,ஜெகதீஷ், ராமு,மற்றும் ஏராளமான ஒக்கலிககவுண்டர் சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News