பறக்கும் படை சோதனையில் 52 ஆயிரம் பறிமுதல்

காங்கேயம் அருகே நத்தக்காடையூர் சாலையில் பறக்கும் படை வாகன சோதனையில்ஆடு வியாபாரியிடம் ரூபாய் 52 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-29 11:59 GMT

பணம் பறிமுதல்

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மாலை பறக்கும் படை அதிகாரி ஆனந்தகுமார், தலைமையிலான கண்காணிப்பு குழு காங்கேயம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காங்கேயம்- நத்தகாடையூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தாராபுரத்தை சேர்ந்த செல்லத்துரை என்ற ஆடு வியாபாரி தனது வாகனத்தில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ. 52 ஆயிரத்தை கொண்டு வந்தது சோதனையில் தெரியவந்தது.

எனவே தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டுவருவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பது தெரிவிக்கப்பட்டு‌ அவர் வைத்திருந்த ரொக்கப்‌ பணத்தை கைப்பற்றி காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News