மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலி

மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியாகின.

Update: 2023-12-23 15:16 GMT

அறுந்து கிடக்கும் மின் கம்பி

குஜிலியம்பாறை அருகே வாசுக்குமரன்பட்டியை சேர்ந்த தங்கமுத்து விவசாயி. இதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை இந்தத் தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.

நேற்று மேய்ச்சலுக்கு சென்ற 10 மாடுகளில் 6 மாடுகள் தோட்டத்துக்குள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

Tags:    

Similar News