பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் பறிமுதல்

குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-28 04:25 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் ஒரு கும்பல் சீட்டு விளையாடி வருவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று, அங்கு சீட்டுக்கட்டுகள் வைத்து, உள்ளே, வெளியே என பணம் வைத்து விளையாடிய 7 நபர்களை கைது செய்து, சூதாட்ட இடத்தில் இருந்த பணம் 11 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணையில் குமாரபாளையம், சங்ககிரி, பகுதிகளை சேர்ந்த ஆனந்தராஜ், 35, கந்தசாமி, 56, கார்த்திகேயன், 40, பழனிசாமி, 56, கண்ணன் குமார், 24, சிவகுமார்,  38, சரவணன், 55, என்பது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News