சந்துவார்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பாலவிடுதி அருகே சந்துவார் பட்டியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-26 01:20 GMT

சூதாட்டம்

கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, சந்துவார்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சந்துவார் பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கடவூர் தாலுகா, சந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கமலக்கண்ணன், ராஜ்குமார், குமரேசன், அருண்குமார், கோபாலகிருஷ்ணன், சரவணன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 350- ஐயும் பறிமுதல் செய்தனர். ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர். 
Tags:    

Similar News