தேர்தல் பறக்கும்படை சோதனை - 78 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும்படை சோதனையில்  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.78,650 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-27 01:22 GMT

பறக்கும் படையினர் பறிமுதல்

தூத்துக்குடியில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையில் இன்னாசிரியர்புரம் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே இன்று பிற்பகல் 3 மணி அளவில் வாகன தணிக்கையின் போது காரில் வந்த சாய்நாத் ராமசாமி என்பவரிடம் 78,650 ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News