80 அடி சாலை அருகே பெண் ஓட்டிய டூ வீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம்.

80 அடி சாலை அருகே பெண் ஓட்டிய டூ வீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம்.

Update: 2024-09-23 10:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
80 அடி சாலை அருகே பெண் ஓட்டிய டூ வீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். கரூர், எல் என் எஸ், திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் மனைவி ராணி வயது 43. இவர் தனது மகன் யஸ்வந்த் வயது 9 என்ற சிறுவனுடன் தனது டூவீலரில் செப்டம்பர் 14ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் 80 அடி சாலை பிரிவு அருகே வந்த போது, எதிர் திசையில் கரூர், ஆத்தூர் பிரிவு, சுந்தர் நகரை சேர்ந்த தங்கராஜ் வயது 40 என்பவர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் சரக்கு வாகனம், வேகமாக சென்று ராணி ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ராணியின் வாகனத்தில் அமர்ந்து வந்த அவரது மகன் யஸ்வந்த்க்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ராணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான தங்கராஜ் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News