போலீசாரை தாக்கிய 9 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது ஏற்பட்ட தகராற்றில் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-27 06:22 GMT

போலீசாரை தாக்கிய 9 பேர் கைது

உளுந்துார்பேட்டை தாலுகா ஆண்டிகுழி பகுதியைச் சேர்ந்த மணி மகன்கள் சுதாகர், 29; பிரேம்குமார், 28; இவர்கள் சேந்தநாடு கடை வீதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டிக்குழியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கனகராஜ், 29; சுதாகர் பைக்கை முந்தி செல்ல முயன்றார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். அப்போது பணியில் இருந்த திருநாவலுார் போலீஸ்காரர் செல்வேந்திரன், தகராறை தடுத்து நிறுத்தினார். ஆனால் இருதரப்பினரும் செல்வேந்திரனை பிடித்து நெட்டி தள்ளினர். இது குறித்து திருநாவலுார் போலீசார் இரு தரப்பினரும் கொடுத்து புகாரின் பேரில் கனகராஜ், சதாசிவம் மற்றும் சுதாகர், பிரேம்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News