பட்டா கத்திகளுடன் சுற்றித்திரிந்த 9 பேர் கைது!

செய்யாறில் காரில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-22 10:09 GMT

கார் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையம் அருகில் ஆற்காடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் 4 பட்டாக்கத்திகள் உள்பட 6 கத்திகள் இருந்தன. உடனே போலீசார் காரில் இருந்த 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து 9 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து பட்டா கத்திகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News