180 மாணவர்களுக்கு ரூ.9.77 கோடி கல்விக்கடன்

தென்காசி மாவட்டத்தில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் 180 மாணவர்களுக்கு ரூ.9.77 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

Update: 2024-02-16 04:15 GMT
 கல்விக்கடன் 
தென்காசி மாவட்டம் இ. சி. ஆ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் 180 மாணவ மாணவியர்களுக்கு ரூ. 9 கோடியே 77 இலட்சம் மதிப்பிலான கல்விக்கடன் உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் கல்விக்கடன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கடன் உதவித்தொகையினை பெற்ற மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் உற்ற துணையாக இருக்க வேண்டும். தொடர்ந்து, மாணவ, மாணவியர்களுக்கு தங்கு தடையின்றியும் விரைவாகவும் கல்வி கடன் வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News