பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடத்திய 17 வயது சிறுவன் - போலீசார் வழக்கு பதிவு

விழுப்புரம் அருகே பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடத்திய 17 வயது சிறுவன் கைது.போலீசார் விசாரணை

Update: 2024-02-17 07:20 GMT

பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடத்திய 17 வயது சிறுவன் - போலீசார் வழக்கு பதிவு

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ்-2 மாணவியான இவர் சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாயமான தங்களது மகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். அப்போது மாணவியை பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுவன் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் கடத்தப்பட்ட மகளை மீட்டு தரக் கோரி செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை கடத்தியதாக 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News