ராமநாதபுரம் சுய உதவிக் குழுகளுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்றது

ராமநாதபுரம் சுய உதவிக் குழுகளுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-02-08 11:38 GMT

கடனுதவி 

ராமநாதபுரம் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலைவகுத்தார். நகர் மன்ற தலைவர் ஆர். கே. கார்மேகம் துணை தலைவர் பிரவீன்தங்கம், மண்டபம் ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,பகுதிகளில் இருந்து ஏராளமான சுய உதவி குழுக்கள் கடன் இணைப்பு பெற வந்திருந்தனர்.இவ்விழாவில் ரூ 475. 68 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும் மதி வாகன எக்ஸ்பிரஸ் வாகனம் 3 பேருக்கு 9.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News