பூந்தமல்லி அருகே உயிருக்கு உலை வைக்கும் பேனர்:அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பூந்தமல்லி அருகே உயிருக்கு உலை வைக்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2024-05-24 10:18 GMT

அதிகரித்துள்ள விளம்பர பேனர்கள்

திருமழிசை - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், மற்றும் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, ஆகிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்கள் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இந்த பேனர்கள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் சில இடங்களில் உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News