ஆவாரம் காட்டு புதூரில் லாரி மீது பைக் மோதி விபத்து

ஆவாரம் காட்டு புதூரில் முன்னாள் சென்ற லாரி, சிக்னலை வெளிப்படுத்தாமல் திடீரென திரும்பியதால் பைக் மோதி விபத்து இருவர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-06-15 16:34 GMT

சாலை விபத்து

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, மேதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் வயது 54. இதேபோல சரஸ்வதி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ஹேமலதா வயது 48. இவர்கள் இருவரும் ஜூன் 13ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், கரூர்-சேலம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். 

 இவர்களது வாகனம் ஆவாரம்காட்டு புதூர், எம் கே பி பைப் கம்பெனி அருகே சென்ற போது, இவர்களுக்கு முன்னாள், திருச்சி மாவட்டம், சிந்தாமணிப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த, சரவணன் வயது 32 என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் வலது புறம் திருப்பியதால், மணிவேல் ஓட்டி சென்ற டூவீலர், லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிவேல் மற்றும் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ஹேமலதா ஆகிய இருவருக்கும்,

Advertisement

பலத்த காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த மணிவேலின் மனைவி பூங்கொடி வயது 44 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை விபத்து ஏற்படும் வகையில் ஓட்டிய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News