சைக்கிள் மீது பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி.

செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார்.

Update: 2024-01-27 07:21 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பல்லி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(49), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 24ம்தேதி காலை சைக்கிளில் செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் சோழவரம் நோக்கி சென்றார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ், சைக்கிள் மீது மோதியது.

இதில் விஜயகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீரா தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News