அரளை கற்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் - இருவர் மீது வழக்கு பதிவு!

அரளை கற்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-05 09:40 GMT

அரளை கற்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டடம் விராலிமலை அடுத்த அன்னவாசல் அருகே உள்ள வாகைப்பட்டி பகுதியில் புதுக்கோட்டை சுரங்கம் மற்றும் கனிம வள அதிகாரி சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆறு யூனிட் அரளை கற்கள் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த டிப்பர் லாரியையும் அதற்கு பின்னால் வந்த கம்பரசர் டிராக்டர் ஆகிய இரண்டையும் பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அன்னவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் டிப்பர் லாரி டிரைவர் தொட்டியம் வயலைச் சேர்ந்த முத்து பழனியும் கம்பரசர் டிராக்டர் டிரைவர் கொல்லம்பட்டி சேர்ந்த வெங்கடாசலம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News