மளிகை பொருட்கள் திருடி சென்ற பெண்கள் மீது வழக்கு பதிவு

தேவரசம்பட்டியில் பல் பொருள் அங்காடியில் மளிகை பொருட்கள் திருடிச் சென்ற இரண்டு பெண்கள் மீது அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-07-03 02:20 GMT

திருட்டு

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அருகே தேவரசம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுத்து அந்த பகுதியில் பல்பொருள் அங்காடியில் நடத்தி வருகி றார். நேற்று அவருடைய கடைக்கு ஸ்கூட்டரில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போல் சுற்றி பார்த்தனர். பின்னர் அங்கிருந்த கோதுமை மாவு, மைதா, சோப், ஆயில், குளியல் சோப்புகள் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை, 2 பெண்களும் எடுத்து மறைத்து நூதன முறையில் திருடி சென்றனர்.

அந்த 2 பெண்களும் சென்ற பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்களும் பொருட்களை திருடி ஆடை யில் மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சின்னமுத்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News