பெண்ணிடம் இருந்து கைப்பையை பிடுங்கி சென்ற நபர் மீது வழக்கு

திருவலாங்காடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் சென்ற இளம் பெண்ணிடம் இருந்து கைப்பையை பிடுங்கி சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைப்பு.

Update: 2024-02-06 06:53 GMT

 கைப்பையை பிடுங்கி சென்ற நபர் போலீசார் வழக்கு

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடில் சென்னையிலிருந்து-அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் ராணிப்பேட்டை மாவட்டம், தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து அதிபர் ஒருவர் புவனேஸ்வரி கையில் வைத்திருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினார் பின்பு எதிர் திசையில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து அடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இவர் திருவள்ளூர் மாவட்டம் ஏக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது பின்னர் அவரிடம் இருந்த கைப்பையை எடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் ஒப்படைத்து கார்த்தி  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News