மாமல்லபுரம் அருகே தீப்பற்றி எரிந்த குடிசை வீடு

மாமல்லபுரம் அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

Update: 2024-05-29 11:40 GMT
மாமல்லபுரம் அருகே தீப்பற்றி எரிந்த குடிசை வீடு

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி, அவரது மனைவி மலா். இவா்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனா். இதற்கிடையே இருவரும் வேலைக்கு சென்று திரும்பிய நிலையில், குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. 

 இதனை அடுத்து அக்கம் பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதில் குடிசை வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகின .

இந்த தீ விபத்து குறித்து மாமல்லபுரம் தீயணைப்புத் துறை, காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News