திண்டிவனம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி

Update: 2023-11-24 04:38 GMT
 மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்த  பசுமாடு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கம் மதுரா பெருமாள் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவருக்கு 7 பசு மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பூபாலனின் தாய் ராணி மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். வைரபுரம் விவசாய நிலப்பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது மழை பெய்தது. அப்போது அந்த வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். தகவல் அறிந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News