நெல்லையில் இறைச்சி கடையில் அலைமோதும் கூட்டம்

நெல்லையில் இறைச்சி கடையில் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-01-01 09:57 GMT

இறைச்சி கடைகளில் நின்ற கூட்டம்

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று நெல்லையில் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக கறிக்கடைகளில் இறைச்சிகள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.இந்த நிலையில் மட்டன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், கோழிக்கறி ஓரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இறைச்சியை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News