சாத்தூர் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சாத்தூர் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Update: 2024-01-31 11:13 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் இந்திரா காலனியில் முனியம்மாள் (55) என்பவர் குடியிருந்து வருகிறார். பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வரும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த நிலையில் 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் பணியாற்றிய தூய்மை பணியாளர் வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று  சமையலை முடித்து விட்டு பணிக்கு சென்றுவிட்டார். மாலையில் திடீரென இவர் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தியணைப்புத்துறைனாக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது பக்கச்சுவர்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த இரண்டு பீரோ கட்டில் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியது. சிலிண்டர் வெடித்த விபத்தை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் வீட்டின் முன்பு திரண்டனர். இந்த தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News