மழை நீரில் தத்தளித்த மாற்றுத்திறனாளி
Update: 2023-12-19 09:46 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சி பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணான துரைச்சி என்பவரின் வீட்டை சுற்றி நான்கு பக்கமும் மழைநீரானது சூழ்ந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த பெண் சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலக அவசர உதவி எண்ணிற்கு அழைத்தது தொடர்ந்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து சென்ற சங்கரன் கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நேரடியாக சென்று வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி பெண் அவரின் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்டு கிராம நிர்வாக அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டு அவர் அங்கே பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் சங்கரன் கோவில் தீயனைப்பு மற்றும் மீட்புபடையினரின் சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுனர்