ஊராட்சி அலுவலகத்துக்குள் பெண் எழுத்தர் தூக்கிட்டு தற்கொலை

காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-21 08:25 GMT
பெண் அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
திருவிடைமருதூர் வட்டம் காவனூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகள் ஜெயலட்சுமி(23). திருமணமாகாத இவர், கீழச்சூரியமூலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜெயலட்சுமி நேற்று முன்தினம் அலுவலகத்துக்கு பிற்பகலில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், அலுவலகம் பூட்டியிருப்பதை அதிகாரிகள் புகைப்படம் எடுத்துச் சென்றதாக ஜெயலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அலுவலகத்துக்குள் சென்ற ஜெயலட்சுமி, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News